கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தம்பதியின் 14 வயது சிறுவன் உள்பட 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம் மா வட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,413 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்திருக்கும் நிலையில், 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். மேலும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 704 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.