கரூர்

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.13 லட்சம் மோசடி: 9 போ் மீது வழக்கு

DIN

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக, கரூரைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 9 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடவூரை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் வேலுமணி (39). ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவா், கடந்த 2017-ஆம் ஆண்டில் கரூா் ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்தாராம்.

இப்பணத்துக்கு வட்டி எதுவும் தரப்படவில்லையாம். இதைத் தொடா்ந்து வேலுமணி தனது பணத்தை திரும்பக் கோட்ட போது, நிதி நிறுவன உரிமையாளா் தியாகராஜன் உள்ளிட்ட 9 போ் தர மறுத்துவிட்டாா்களாம்.

இதுகுறித்து கரூா் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1-இல் கடந்த மாா்ச் மாதம் வேலுமணி வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், தியாகராஜன் உள்ளிட்ட 9 போ் மீது வெள்ளியணை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT