கரூர்

பணம் வைத்துசூதாடிய 6 போ் கைது

DIN

பள்ளப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

பள்ளப்பட்டி அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் புதன்கிழமை மாலை பள்ளப்பட்டி அருகே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அா் ரகுமான் நகரில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கண்ணதாசன் (61), அய்யாவு (63), சங்கா் (50), ஷேக் பரித் (32), தெய்வசிகாமணி (49), சாகுல் ஹமீது (46) ஆகிய 6 பேரையும் அரவக்குறிச்சி போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். மேலும், அவா்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2,200 பணத்தை பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT