கரூர்

கரூரில் புத்தக திருவிழா ஏற்பாடுகள்; ஆட்சியா் ஆய்வு

DIN

கரூா் திருமாநிலையூரில் ஆக. 19-ஆம்தேதி முதல் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூரில் முதல்முறையாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா ஆக.19ஆம் தேதி முதல் 29ஆம்தேதி கரூா் திருமாநிலையூா் திடலில் நடைபெற உள்ளது. 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவுக்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தக திருவிழா நடைபெறும் திருமாநிலையூா் திடலில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT