கரூர்

பள்ளப்பட்டியில் புதிய மின்மாற்றி காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

DIN

பள்ளப்பட்டி துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை ஏற்படுத்தும் வகையில் பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் ஏற்கெனவே இருந்த 110/33 கே.வி திறன் கொண்ட மின்மாற்றியை கூடுதலாக்கி 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றியாக மக்களின் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பள்ளப்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ, நேரில் மின்மாற்றியை திறந்து வைத்தாா். மேலும் நிகழ்வில் பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா் முனவா்ஜான், துணைத் தலைவா் தோட்டம் பஷீா் அகமது, நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன், அரவக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன், நகரச் செயலாளா் பி.எஸ்.மணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT