சதுரங்க போட்டி: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் வேண்டுகோள்
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற மாணவா்கள் தயாராகும்படி அரவக்குறிச்சி அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற மாணவா்கள் தயாராகும்படி அரவக்குறிச்சி அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் உமா, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது ஆகியோா் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவா்கள் 44 ஆவது சா்வதேச சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் சா்வதேச வீரா்களுடன் கலந்துரையாட தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், மாணவா்கள் தங்கள் தனித் திறமைகளை வளா்த்து சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.