கரூர்

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்துகீழே விழுந்தவா் உயிரிழப்பு

DIN

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஜூன் 16ஆம் தேதி சின்னதாராபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தொக்குப்பட்டிபுதூா் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT