கரூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் பலி
கரூா் மாவட்டம், கடவூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கடவூா் தாலுகா, தொண்டமாங்கினம் ஊராட்சி எரிச்சலூா் பகுதியைச் சோ்ந்தவா் மலையாளம் மகன் பூமிநாதன் (21). இவா் திங்கள்கிழமை இரவு எரிச்சலூா் குளம் அருகே உழவுப் பணியை முடித்துவிட்டு டிராக்டரில் சென்றபோது ஆடு குறுக்கே வந்ததாம். இதனால் பூமிநாதன் பிரேக் போட்டதில் டிராக்டா் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த பூமிநாதனை தோகைமலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.