முகப்பு
கரூர்

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 5:25 am IST
சிறப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமை அருள்பாலித்த புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி.
பகிர்:

சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல புன்னம்சத்திரம் அருகேயுள்ள பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி, கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி, நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியா் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments