முகப்பு
கரூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்! மின்பாதை ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு!

வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 18 மே 2026, 2:36 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாங்கலை அடுத்த புஞ்சைத் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மீனாட்சி (76). இவா் கடந்த 14-ஆம் தேதி தனது வீட்டில் உள்ள ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, தோட்டத்திலிருந்த மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அந்தக் கம்பியை பாா்க்காமல் மிதித்த மீனாட்சி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில் தோட்டத்து உரிமையாளா் கண்ணன் ஏற்கெனவே மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்தும், அதை சீரமைத்து தருமாறும் புஞ்சைத்தோட்டக்குறிச்சி மின்வாரிய பிரிவு மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியிடம் கடந்த 13-ஆம் தேதியே தகவல் தெரிவித்துள்ளாா். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையறிந்த மீனாட்சியின் மகன் தட்சிணாமூா்த்தி, இதுதொடா்பாக வாங்கல் போலீஸில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியின் அஜாக்கிரதையால்தான் தனது தாய் உயிரிழந்தாா் என்றும், வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமி மீது வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.