முகப்பு
பெரம்பலூர்

காவிரி விவகாரம்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:26 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 
இதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் தேரடிப் பகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு  எதிராக முழக்கமிட்டு, பிரதமர் மோடி உருவப்பொம்மையை எரித்தனர். முன்னதாக அக்கட்சி நிர்வாகிகள், வியாழக்கிழமை ( ஏப். 5) நடைபெறுகிற முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரக்கோரி அனைத்து வணிகக் கடை உரிமையாளர்களடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். 
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வழக்குரைஞர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தைச் இளைஞர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments