முகப்பு
பெரம்பலூர்

காவிரி விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் மறியல்: 30 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில்  

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:24 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேரைப் பெரம்பலூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டன. 
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ப. அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments