பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில் நலத்திட்ட உதவி

DIN

மாவிலங்கை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 322 பயனாளிகளுக்கு ரூ. 1.76 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மாவிலங்கை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது: 
ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, சின்ன வெங்காயத்தை பாதுகாக்க கொட்டகை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து,  பல்வேறு துறைகள் சார்பில் 322 பயனாளிகளுக்கு, ரூ. 1,76,37,541 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொ) அன்புராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், வட்டாட்சியர் ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT