துரித உணவு தயாரிப்பது குறித்த இலவசப் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ஜே. அகல்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிச.18 ஆம் தேதி முதல் துரித உணவு தயாரிப்புப் பயிற்சி இலவசமாக பயிற்சி மையத்தில் அளிக்கப்பட உள்ளது. 18 வயதை கடந்த எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். 10நாள்கள் நடைபெறும் பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.டிச.14 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328- 277896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.