முகப்பு
பெரம்பலூர்

எலக்ட்ரிக்கல் கடையில் ரூ. 1.25 லட்சம் திருட்டு

பெரம்பலூர் நகரில் எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து ரூ. 1.25 லட்சம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது. 

Updated On : 5 நவம்பர் 2018, 8:48 am IST
பகிர்:

பெரம்பலூர் நகரில் எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து ரூ. 1.25 லட்சம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது. 
பெரம்பலூர் மாவட்டம், பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சவுந்திரராஜன் (35). இவர், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். வியாபாரத்தை முடித்து விட்டு வழக்கம்போல, சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டுச்சென்றாராம். இந்நிலையில், அந்தக் கடையின் அருகேயுள்ள டீ கடையை, அதன் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்க வந்தாராம். அப்போது. எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற சவுந்திரராஜன் உள்ளே சென்று பார்த்தபோது, தீபாவளி ஊக்கத்தொகையாக ஊழியர்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1.25 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. சவுந்திரராஜன் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிந்த பெரம்பலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, துறையூர் சாலையில் உள்ள காய்கறி மற்றும் மருந்துக் கடையின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சி நடந்திருப்பதும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments