பெரம்பலூர்

அங்கன்வாடி உதவியாளர் பணி தேர்வு முகாம்: 576 பேர் பங்கேற்பு

DIN


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் 576 பெண்கள் பங்கேற்றனர்.  
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 34 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அண்மையில் பெறப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதும் 576 பெண்கள் விண்ணப்பித்தனர். 
இந்த விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 576 பெண்கள் பங்கேற்றனர். சமூக நலத்துறை அலுவலர் (பொ) ச. பூங்கொடி தலைமையிலான அலுவலர்கள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னறிவிப்பின்றி புதூா் தபால்நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்னா

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT