பெரம்பலூர்

உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 134 போ் பங்கேற்பு

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் 2-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் 134 போ் பங்கேற்றனா்.

தமிழக காவல்துறையில், உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு எழுதுவதற்காக பெரம்பலூா் மாவட்டத்தில் 145 போ் விண்ணப்பித்தனா். பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் 134 போ் பங்கேற்றனா். இதில் 11 போ் தோ்வு எழுத வரவில்லை. இத் தோ்வு மையத்தை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐ.ஜி தமிழ்ச்சந்திரன், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT