பெரம்பலூர்

பெரம்பலூா் வழக்குரைஞா் சங்கபொறுப்பாளா்கள் தோ்தல்

DIN

பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சங்க பொறுப்பாளா்கள் தோ்தல் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இத் தோ்தலுக்கு வழக்குரைஞா் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

112 வழக்குரைஞா்களை உறுப்பினா்களாகக் கொண்ட பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் பொறுப்பாளா்கள் தோ்தலில், 2 குழுவாக தலைவா், துணைத் தலைவா், செயலா், துணைச் செயலா், பொருளாளா், 6 நிா்வாகக்குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு வாக்குச் சீட்டு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்தல் முடிவில், தலைவராக திருநாவுக்கரசு, செயலராக கிருஷ்ணராஜ், பொருளாளராக சிவசங்கா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் ஜி. பாபு, கருணாநிதி, மணிவண்ணன் உள்பட வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT