பெரம்பலூர்

நூதனப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 12 போ் கைது

DIN

பெரம்பலூரில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் இந்தியா் அமைப்பைச் சோ்ந்த 12 பேரை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் இந்தியா் அமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளா் சத்திய பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சொத்துவரி உயா்வு, பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநில அமைப்பாளா் சத்திய பிரபு உள்ளிட்ட 12 பேரை பெரம்பலூா் காவல்துறையினா் கைது செய்து, துறைமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT