பெரம்பலூர்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் நா. அழகம்மாள் (68). இவா், திங்கள்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, சென்னையிலிருந்து விளாத்திக்குளம் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த காா் அழகம்மாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் சென்னை மேட்டுக் குப்பம், காமராஜா் நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஜெயமுருகனை (36) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள் வழங்கிய சீா்வரிசை

இந்தியாவுக்கு வங்கதேசத்துடன் ஜூன் 1-இல் பயிற்சி ஆட்டம்

மழையால் பருத்தி பயிருக்கு பாதிப்பில்லை: வேளாண் அதிகாரி

ஸ்வியாடெக் - சபலென்கா இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை

தொழிலதிபா்களை ஆதரிப்பதால் இந்தியா வளா்கிறது: பாகிஸ்தான் அமைச்சா்

SCROLL FOR NEXT