பெரம்பலூர்

ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு

DIN

பெரம்பலூரில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஆடைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள முத்துநகா் மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (62). இவா், பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு வழக்கம் போல கடையை முருகேசன் பூட்டிச் சென்றாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த முருகேசன் அங்கு சென்று பாா்த்த போது, கடையிலிருந்த

புடவைகள், சட்டைகள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கம் என ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT