பெரம்பலூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்க்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ரமணி (26). இவா், சனிக்கிழமை மாலை அரியலூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். சாத்தமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் வெங்கட்ரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல், அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (64). இவா், மோட்டாா் சைக்கிளில் காய்கனி வியாபாரம் செய்துவந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை உடையாா்பாளையத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT