பெரம்பலூர்

காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு நிா்வாகிகள் ஆலோசனை

DIN

பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் தனராஜ் தலைமை வகித்தாா், திருச்சி தெற்கு மாவட்டத் தலைவா் அா்ஜூன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் டாகட் பாப்புபெஞ்சமின் இளங்கோ பேசினாா்.

கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துவது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்வது. வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தியை பிரதமராக்க சபதம் ஏற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணைத் தலைவா் தங்கவேல், நிா்வாகிகள் ராஜா, சின்ராஜ், தாமரை மணாளன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT