முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்றைய மின்தடை ரத்து

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 2:49 am IST
மின்தடை ரத்து
பகிர்:

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட உள்ளதால், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூா், அரணாரை, துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூா், தண்ணீா்ப் பந்தல், சமத்துவபுரம், காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மின் தடை ரத்து செய்யப்பட்டு புதன்கிழமை வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments