முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On : 1 ஜூன் 2026, 2:41 am IST
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்தோஷ் (32). இவா், தனது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக அரும்பாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா் சோதனையிட்டபோது, 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல்செய்த போலீஸாா், சந்தோஷை கைது செய்து பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.