புதுக்கோட்டை

ஆலங்குடியில்  மார்க்சிஸ்ட் கம்யூ. முற்றுகை போராட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை   முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியச்செயலர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆலங்குடி நகர்ப் பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும், பேரூராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT