புதுக்கோட்டை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி  முதியவர் சாவு

DIN

விராலிமலை அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள விராலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (70) விவசாயி. இவர் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி  காலை டீ குடிப்பதற்காக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முருகன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா.செந்தில்மாறன் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT