புதுக்கோட்டை

இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (நவ.10) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்ட அறிக்கை: பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் மாதம்தோறும் 2ஆம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடைகள் தொடர்பான குறைகளை தீர்க்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க அதிகாரிகள் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு ஆட்சியரால் நியமிக்கப்படும் துணை ஆட்சியர் நிலையிலுள்ள அலுவலர் பார்வையாளராக இருப்பார்.
புதுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட திருமலைராய சமுத்திரம், ஆலங்குடியில் செரியலூர், திருமயத்தில் கே.ராயபுரம், குளத்தூர் வட்டத்தில் முத்துக்காடு, இலுப்பூரில் கட்டக்குடி, கந்தர்வகோட்டையில் கோவிலூர், அறந்தாங்கி வட்டத்தில் ஆளப்பிறந்தான், ஆவுடையார்கோவிலில் கண்ணமங்கலம், மணமேல்குடி வட்டத்தில் செய்யானம், பொன்னமராவதியில் ஏனாதி, கறம்பக்குடியில் பல்லவராயன்பத்தை, விராலிமலை வட்டத்திற்குள்பட்ட கொடும்பாளூர் ஆகிய ஊர்களில் பொதுவிநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT