புதுக்கோட்டை

சைக்கிள் மீது கார் மோதி முதியவர் சாவு

DIN

விராலிமலை அருகே சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
விராலிமலை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த திருப்பாலி மகன் கருப்பையா(67). விவாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கருப்பையா நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விராலிமலை போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மோகன் மகன் ராஜ்பிரபுவைக்(24) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT