புதுக்கோட்டை

அன்னவாசல்,  விராலிமலையில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

விராலிமலை, அன்னவாசல் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், ஆரியூர், புதூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பெரியவர்கள், சிறியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.  இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT