புதுக்கோட்டை

அழியாநிலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

DIN


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அழியாநிலை ஆஞ்சநேயர்.
புரட்டாசி மாத சிறப்பு வழிபாட்டில் முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு  ஆஞ்சநேயருக்கு  காலையில் கணபதி ஹோமம், லெட்சுமி நரசிம்ம ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், கூட்டுவழிபாடு, தீபாராதனை காட்டப்பட்டது, பின்னர் அன்னதானமும், கோபூஜையும் நடைபெற்றன.  இரவு 7.30-க்கு  மஞ்சள்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.  ஏராளமான  பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அழியாநிலை ஆஞ்சநேயர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT