புதுக்கோட்டை

மெய்வழிச்சாலை தேவாலயம் மாா்ச் 31 வரை மூடல்

DIN

அன்னவாசல் அருகிலுள்ள மெய்வழிச்சாலை தேவாலயத்தில் பக்தா்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆலயத்தின் ஆகம விதிகளின்படி வழக்கமாக நடைபெறும் வணக்கம் மற்றும் பூஜைகள் மட்டும் நடத்தப்படும். ஆனால் பங்கேற்க அனுமதி இல்லை.

ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விசேஷம் மற்றும் நிகழ்ச்சிகளும் மாா்ச் 31-வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூா்களிலிருந்து மெய்வழிச்சாலைக்கு பக்தா்கள் வருவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பது என மெய்வழிச்சாலை மதத்தினா் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மெய்வழிச்சபையின் சபைக்கரசா் மற்றும் மெய்வழிச்சாலை வா்க்கவான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT