ஆலங்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் அபிநயா(15). திருச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த இவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அபிநயாவின் உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.