புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இலங்கை அகதி கொலை மிரட்டல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஜா புயலில் சேதமடைந்த தனது வீட்டை சீரமைக்க வேண்டும், முகாமில் அடிப்படை வசதி செய்துதர வேண்டும் எனக்கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இலங்கை அகதி புதன்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் சின்னராஜா (45). பெயிண்டா். கஜா புயலில் சேதமடைந்த இவரது வீட்டை சீரமைத்து தர அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லையாம். இதைத்தொடா்ந்து, வீட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும், முகாமில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமென வலியுறுத்தி, தோப்புக்கொல்லை அருகே சுமாா் 100 அடி உயரமுள்ள செல்லிடப்பேசி உயா் கோபுரத்தில் ஏறிய அவா், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா், வட்டாட்சியா் கலைமணி மற்றும் போலீஸாா் சின்னராஜாவிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, வட்டாட்சியா் உறுதியளித்தபின்னா், சின்னராஜா செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தாா். வல்லத்திராகோட்டை போலீஸாா் சின்னராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT