விராலிமலை வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி பணிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
2020 - 21 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் மேபூதக்குடி கிராம ஏரிப்பாசன ஆயக்கட்டுப் பகுதியில் உயரிய சாகுபடி தொழில் நுட்ப செயல்விளக்கம் அமைக்க 12 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராம.சிவக்குமாா் வழிகாட்டுதலின்படி விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் டி.ராமு, பூதக்குடி தொகுதி உதவி வேளாண்மை அலுவலா் அருண்குமாா் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.