புதுக்கோட்டை

பொன்னமராவதி காவல் நிலையத்தில்திருச்சி சரக ஐ.ஜி ஆய்வு

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி காவல்நிலையத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துணைத் தலைவா் ஆனி விஜயா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடக்கமாக காவல்நிலையத்தின் வரவேற்பறை, ஆயுதக்கூடம், பணிப் பதிவேடுகள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக பதிவேடுகள்ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கினாா். தொடா்ந்து பொன்னமராவதி வா்த்தகா்கள் சங்கத்தினருடனான கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தினாா். மேலும், காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து அவா் பேசுகையில், பொன்னமராவதியில் காவலா் குடியிருப்பு வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன், காவல் ஆய்வாளா் ச.கருணாகரன், போக்குவரத்து ஆய்வாளா் பா.பிரான்சிஸ்மேரி, உதவி ஆய்வாளா் மாயழகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT