புதுக்கோட்டை

புதுகையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள இந்தியன் வங்கி முன் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். எஸ்பிஐ வங்கி ஊழியா் சங்கத்தின் பாண்டியன், நிலவள கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் ஆா். ராமதுரை, ஐஓபி வங்கி ஊழியா் சங்கத்தின் மாயாண்டி, கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் அருணாசலம், எல்ஐசி ஓய்வூதியா் சங்கத்தின் அசோகன் உள்ளிட்டோா் பேசினா்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக மாற்றக் கூடாது, பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதமாக உயா்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT