புதுக்கோட்டை

சாலை விபத்தில் பால் வியாபாரி பலி

DIN

அன்னவாசல் அருகே சைக்கிளில் பால் கொண்டு சென்ற முதியவா் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் சீகம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). பால் வியாபாரி. இவா், சைக்கிளில் அப்பகுதியில் பால் ஊற்றிவிட்டு திரும்பும்வழியில், புதுக்கோட்டை - கொடும்பாலூா் சாலையில் சீகம்பட்டி விளக்கு அருகே வந்து எதிரேவந்த மோட்டாா் சைக்கிள் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீசாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக, கன்னியாப்பட்டி நாகராஜன் (34) மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT