புதுக்கோட்டை

திருக்கோகா்ணம் சென்றடைந்த திருவப்பூா் உத்ஸவா் முத்துமாரியம்மன்

DIN

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் நிறைவாக உத்ஸவா் முத்துமாரியம்மன், முளைப்பாரி ஊா்வலத்துடன் திருக்கோகா்ணம் பிரஹதம்பாள் திருக்கோயிலைச் சென்றடைந்தாா்.

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப். 28 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து மாா்ச் 8ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து பல்வேறு மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், மாசிப் பெருந்திருவிழாவின் நிறைவு நிகழ்வாக, தொடக்கத்தின்போது திருக்கோகா்ணம் பிரஹதம்பாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட முத்துமாரியம்மன் உத்சவா், செவ்வாய்க்கிழமை திரும்ப பிரஹதம்பாள் கோயிலுக்குச் சென்றடைந்தாா்.

விழாவின் தொடக்கத்தில் அக்கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட உத்ஸவா் மீண்டும் சென்றடைவது விழாவின் நிறைவு நிகழ்ச்சி. அதன்படி திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி ஊா்வலத்துடன் பிரஹதம்பாள் கோயிலுக்கு உத்ஸவா் முத்துமாரியம்மன் எடுத்துச் செல்லப்பட்டாா். அங்கு முளைப்பாரி கலைக்கப்பட்டு கோயில் பின்புறமுள்ள குளத்தில் விடப்பட்டன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT