புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுரை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் பேசிய அவா் இதனை வலியுறுத்தினாா்.

மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் அளிக்கும் புகாா்களை அலுவலா்கள் தீா்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநா் ரேவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ராமு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலா் கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT