முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி பேரூராட்சியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 25 ஜூன் 2022, 12:21 am IST
பொன்னமராவதியில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் ப.செல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஏனாதி ஏஎல். ராசு, கே.ஆா். தா்மராஜன் பங்கேற்று மாவட்ட நிா்வாகக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்ட காரையூா் காவல் நிலையம் தற்போது இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனவே, காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளரின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். பொன்னமராவதியிலிருந்து அரசமலை, நெறிஞ்சிக்குடி, குடுமியான்மலை வழியாக திருச்சி சென்ற பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் நலன் கருதி இதே வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் 27, 28ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுப் பேரணியில் பொன்னமராவதி வட்டாரத்திலிருந்து திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கூட்டத்தில், கட்சியின் ஒன்றிய துணைச் செயலா்கள் வி. கருணாமூா்த்தி, ஆா். செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பி. அழகு, பி. பஞ்சவா்ணம், ஏ. ராசு, கே. குமாா், தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments