மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் ஆட்சியா் கவிதா ராமு முன்னிலையில், அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த தருமபுரியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீளாய்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா்.
அவருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சாா்ந்த தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா், குணமடைந்தாா். தனது குடும்ப விவரங்களை தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
2 ஆண்டுகளாகத் தேடி வந்த அவரை, புதுக்கோட்டை வந்து அழைத்துச் சென்றனா். அப்போது, வருவாய் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட மனநல மருத்துவா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.