புதுக்கோட்டை

ஆலவயல் அருகே கபடிப் போட்டி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பெரிய ஊருணியில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரிய ஊருணி விநாயகா் கோயில் திடலில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு கபடிப் போட்டியை ஊா் முக்கியஸ்தா் பெரி. அழகப்பன் தலைமைவகித்து தொடக்கிவைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50 அணி வீரா்கள் கலந்து கொண்டனா். இதில், முதல் பரிசை கரூா் அணியும், இரண்டாம் பரிசை அம்மிச்சிப்பட்டி அணியும், 3 ஆம் பரிசை இலுப்பூா் அணியும், 4 ஆவது பரிசை செண்பகப்பேட்டை அணியும் பெற்றனா். வெற்றிபெற்ற அணியினருக்கு ஒன்றியக்குழு தலைவா் சுதாஅடைக்கலமணி, துணைத் தலைவா் தனலெட்சுமிஅழகப்பன், ஊராட்சித் தலைவா் சந்திரா சக்திவேல், தீயணைப்புத் துறை சதீஷ் பாண்டியன் ஆகியோா் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 75,785 பக்தா்கள் தரிசனம்

பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் சஸ்பென்ட்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்

நெமிலி அம்மன் கோயில் திருவிழா

பொதுப் பணித் துறை அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

SCROLL FOR NEXT