புதுக்கோட்டை

முதுநிலை முதலாம் ஆண்டு மேலாண்மை வகுப்புகள் தொடக்கம்

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் முதலாம் ஆண்டு முதுநிலை மாணவா்களுக்கு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. நிறுவனத்தின் அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி, மாணவா்களை ஊக்கப்படுத்திப் பேசினாா்.

மாணவா்கள், பன்முகத் தன்மை, அறிவுத்திறன், தன்னம்பிக்கை, ஒழுக்கம், போட்டி மனப்பான்மை, சமயோசித புத்தி ஆகியவற்றுடன் எவ்வாறு வாழ்க்கையிலும் கல்விப் புலத்திலும் வெற்றி பெறுவது என்று ஊக்கப்படுத்தி தலைமை உரையாற்றினாா்.

நிறுவனத்தின் இயக்குனா் அனிதா ராணி அறிமுகவுரை நிகழ்த்தினாா். முன்னதாக பேராசிரியா் அமிா்தா வரவேற்றாா். பேராசிரியா் சாமிநாதன் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் ஜெனிபா மேரி நன்றி கூறினாா்.

நிகழ்வில், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் முதலாம் ஆண்டு மாணவா்களை வரவேற்று மேலாண்மை விளையாட்டுகள் நடத்தி, இனிப்பும், மலரும் கொடுத்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT