பொன்னமராவதி அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியிலிருந்து ஈச்சம்பட்டிக்கு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் கடந்த சுமாா் 5 மாதத்திற்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை போடப்பட்டு சுமாா் ஐந்து மாதம் கூட முடிவடையாத நிலையில், தற்போது அந்தச் சாலையில் அரை அடி அளவுக்கு திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே இச்சாலையை மறுசீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.