புதுக்கோட்டை

புதுகை மாவட்ட தேக்வாண்டோ போட்டி

DIN

 புதுக்கோட்டை மாவட்ட அளவிலான 8ஆவது தேக்வாண்டோ போட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தோ்வுக்கூட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேக்வாண்டோ விளையாட்டு சங்க மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட கௌரவத் தலைவா் ஏவிஎம்.காா்த்திக் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தங்கமணி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், மாவட்ட உடற்கல்வி அலுவலா் தங்கராஜ், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனியசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். போட்டியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் மற்றும் சங்கங்களைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.

முன்னதாக அமைப்புச் செயலா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில், துணைச் செயலா் சாகுல் அஹம்மது நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT