புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

DIN

பொன்னமராவதி அருகே சுமை லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் ஒரு இளைஞா் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

திருமயம் வட்டம், மேலப்பனையூா் அருகே உள்ள புரகரப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரக்குமாா் (22). இவரும், பூவக்கன்பட்டியைச் சோ்ந்த மெய்யா் மகன் காா்த்திக் (27) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூடலூா் -புதுக்கோட்டை சாலை கூடலூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே நெல் மூட்டைகள் ஏற்றிவந்த சரக்கு லாரியுடன் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த வீரக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகில் உள்ளோா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். சரக்கு லாரி ஓட்டுநரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். இதுகுறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT