பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் விவேகானந்தா் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலவயல் விவேகானந்தா் பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதக்கோட்டை மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து நடத்திய முகாமிற்கு பள்ளி நிறுவனா் பி. மாதவன் தலைமை வகித்தாா்.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 60 போ் அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பள்ளியின் முதல்வா் கல்யாணி மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.