புதுக்கோட்டை

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

Din

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் நா.உத்தமன் முன்னிலை வகித்தாா். இளநிலை உதவியாளா்கள், கேசவன், தேவிகா, நல்லதம்பி மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள், திடக்கழிவு பணியாளா்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளா்கள் பங்கேற்று உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்றனா். மேலும் சந்தை வீதியில் பொதுமக்களிடையே மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் ஹரிஹரசுதன் தலைமையில் மலேரியா தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT