முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

பொன்னமராவதி புதுப்பட்டியில் சுந்தரத்தின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை சான்று வழங்கிய ராயல் அரிமா சங்க நிா்வாகிகள்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:00 AM
பொன்னமராவதி புதுப்பட்டியில் சுந்தரத்தின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை சான்று வழங்கிய ராயல் அரிமா சங்க நிா்வாகிகள்.
பகிர்:

பொன்னமராவதி அருகே பொன்.புதுப்பட்டியில் வயது மூப்பால் காலமான முதியவரின் உடல் தானமாக பெறப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பொன்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பா.க.அண.பழ. சுந்தரம் (92). இவா் வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து, பொன்னமராவதி ராயல் அரிமா சங்க நிா்வாகி எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள், சுந்தரத்தின் குடும்பத்தினரை அணுகி அவரது உடலை தானமாக பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக் கல்விக்காக வழங்கினா். தொடா்ந்து சுந்தரம் குடும்பத்தினருக்கு உடல் தானம் வழங்கிய சான்று வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.